search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆற்றில் குழந்தை மூழ்கியது"

    காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்ற போது தந்தையின் கையில் இருந்து ஆற்றுக்குள் தவறிவிழுந்த சிறுவனை தேடும் பணி 2-வதுநாளாக தொடர்கிறது. #Selfie #CauveryRiver
    பரமத்திவேலூர்:

    கரூர் எல்.ஜி.பி. நகரைச் சேர்ந்தவர் பாபுவின் மகன் தன்வந்த் (4) யு.கே.ஜி. படித்து வந்தான்.

    பிறந்த நாளையொட்டி, பெற்றோர் அவனை வேலாயுதம் பாளையம் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை காண அழைத்து சென்றனர்.

    காவிரி பாலத்தின் கிழக்குப்புறம் உள்ள 24-வது தூண் மீது மகனை அமர வைத்து இடது கையால் தாங்கிப் பிடித்துக் கொண்டு செல்போனில் செல்பி எடுத்தார்.

    அப்போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பின்னால் சாய்ந்த தன்வந்த் பாபுவின் பிடியில் இருந்து நழுவி ஆற்றில் விழுந்தான். இதில் அந்த சிறுவன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான்.

    தீயணைப்பு வீரர்கள், போலீசார் அங்கு விரைந்து வந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். விநாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் நீரின் இழுப்பு வேகம் அதிகமாக இருந்தது. இதனால் அவர்கள், ஆற்றின் கரையோரமாக தேடினார்கள்.

    மாயனூர் தடுப்பணை பகுதியில் கரூர், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் இரவு 8 மணி வரை தேடினார்கள். அதன் பிறகு தேடும் பணியை நிறுத்தி விட்டனர்.

    இன்று 2-வது நாளாக காலை 8 மணி முதல் வாங்கல் காவிரி ஆற்று பாலத்தில் இருந்து ஒருவந்தூர், உன்னியூர், காட்டுப்புத்தூர், முசிறி, புலியூர், மாயனூர் தடுப்பணை வரை தீயணைப்பு நிலைய வீரர்கள் ரப்பர் படகு கொண்டு தேடி வருகிறார்கள். அப்பகுதி மீனவர்களும் பரிசல்கள் மூலமாக சிறுவனை தேடி வருகிறார்கள்.

    காட்டுப்புத்தூர் பகுதியிலும், முசிறி பகுதியிலும் காவிரி ஆற்றின் நடுவே உயரமான திட்டுக்கள் உள்ளது. அதில் மரம், செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. அந்த பகுதியில் ஆங்காங்கே பெரிய மரங்களும் உள்ளன. சிறுவன் இந்த பகுதியில் தங்கி இருக்கலாம் என்ற கோணத்தில் வீரர்கள் தேடுகின்றனர்.

    இது குறித்து தீயணைப்பு வீரர்கள் கூறுகையில், நேற்று விட இன்று காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக வருகிறது. இதனால் ஆற்றில் இறங்கி சிறுவனை தேடும் பணி சற்று எளிதாக உள்ளது. நேற்று இருட்டாக இருந்ததால் தேட முடியவில்லை. இன்று நாங்கள் ஒருவந்தூரில் இருந்து மாயனூர் வரை தேடி வருகிறோம் என்றனர். #Selfie #CauveryRiver
    காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்துடன் செல்பி எடுக்க முயன்றவர் தன் கையில் இருந்த 4 வயது குழந்தையை ஆற்றுக்குள் தவறவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Selfie #CauveryRiver
    பரமத்திவேலூர்:

    கரூர், என்.சி.சி.நகரை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் தன்வந்த் (4). ஒரு தனியார் பள்ளியில் பிரிகேஜி வகுப்பு படித்து வந்தான்.

    காவிரி ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தை பார்ப்பதற்காக பாபு, மனைவி சோபா மற்றும் மகன் தன்வந்த் ஆகியோருடன் காரில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வாங்கல் ஆற்று பாலத்திற்கு இன்று காலை 9.30 மணிக்கு வந்தார். காரை ஓரமாக நிறுத்தி விட்டு வாங்கல் ஆற்று பாலத்தில் நின்று வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடுவதை பார்த்து மகிழ்ந்தனர்.

    கரை புரண்டும் ஓடும் வெள்ளத்தை செல்பி எடுப்பதற்கு ஆசைப்பட்டனர். இதற்காக பாபு, பாலத்தின் தடுப்பு சுவர் ஓரத்தில் நின்று மகனை ஒரு கையில் தூக்கி பிடித்தார். மற்றொரு கையில் செல்போன் வைத்துக் கொண்டு செல்பி எடுத்தார்.

    அப்போது குழந்தை தன்வந்த் திடீரென திமிறினான். இதனால் நிலை தடுமாறிய பாபு கையில் இருந்த குழந்தையை விட்டு விட்டார். உடனே குழந்தை ஆற்றில் விழுந்தது.

    இதை பார்த்த பாபு மற்றும் சோபா கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அய்யோ குழந்தை ஆற்றில் விழுந்து விட்டது. யாராவது வந்து காப்பாற்றுங்கள்... என்று கதறினர். தங்கள் முன்பு குழந்தையை வெள்ளம் இழுத்து செல்வதை கண்டு துடித்தனர்.

    அங்கிருந்தவர்களிடம் யாராவது குழந்தையை காப்பாற்றுங்கள் என கெஞ்சினார்கள். ஆனால், காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் ஆற்றில் குதிக்க முன்வரவில்லை. தாய் சோபா அதிர்ச்சியில் உறைந்தார்.

    போலீசார், தீயணைப்பு வீரர்கள் படகு மற்றும் பரிசல்கள் மூலம் குழந்தையை தேடி வருகிறார்கள். #Selfie #CauveryRiver
    ×